உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 14வது சுற்று போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லீரனும், தமிழக வீரர் குகேசும் தலா 6.5 புள்ளிகள் பெற்று உள்ளனர். இதனை அடுத்து 14வது சுற்று போட்டி நடைபெற உள்ளது. இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் ஒரு புள்ளியைப் பெற்று ஏழரைப் புள்ளிகளை அடைந்தால் அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி விடுவார்.
இரு வீரர்களும் போட்டியை சமனில் முடித்தால் இருவருமே 7 புள்ளிகளை பெற்று இருப்பார்கள். இதன் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக் சுற்று நடைபெறும். ஒரு வேலை டிரா ஆனால் 13ம்தேதி இந்த ஆட்டங்கள் நடைபெறும். முதலில் ராபிட் ரவுண்டில் வெற்றியாளர்களை தீர்மானிக்க பார்ப்பார்கள். இதில் மொத்தம் நான்கு சுற்றுகள் நடைபெறும்.












