Email :16
முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, பெங்களூருவில் சென்டாரஸ் லைப்ஸ்டைல் பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் பணி புரியும் ஊழியர்களிடம் இருந்து, 24 லட்சம் ரூபாய் வருங்கால வைப்பு நிதியை (பிஎப்) வசூலித்து அதை முறையாக செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறைக்கு புகார் தரப்பட்டதை அடுத்து, உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












