Email :14
சிஆர்பிஎப் இயக்குனர் ஜெனரல் அனிஷ் தயாள் சிங் நேற்று பதவியில் இருந்து ஓய்வுபெற்றார். மணிப்பூரை சேர்ந்த 1988 பேட்ச் அதிகாரியான இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் சிஆர்பிஎப்புக்கு பொறுப்பேற்றார். இவரது தலைமையின் கீழ் 4 புதிய பட்டாலியன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. சட்டீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக 4000க்கும் மேற்பட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.அனிஷ் தயாள் சிங் நேற்று பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து மூத்த ஐபிஎஸ் அதிகாரியான விட்டல் குமார் சிஆர்பிஎப் பொறுப்பு தலைவராக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.









