ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. முதல் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஜோடியாக களமிறங்கிய பிரியா புனியா 3, ஸ்மிரிதி மந்தனா 8 ரன்கள் எடுத்து வந்த வேகத்திலேயே வெளியேறினர்.
அடுத்து வந்த தியோல் 19, கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 17, ரோட்ரிக்ஸ் 23, கோஷ் 14 ஆகிய நான்கு பேர், இரட்டை இலக்க ரன்களில் வெளியேற இறுதியில் இந்திய அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேகன் ஸ்கூட் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து 101 ரன் என்ற எளிய வெற்றி இலக்கை ேநாக்கி ஆஸ்திரேலிய மகளிர் அணி ஆட துவங்கியது. போபி லிச்பில்டு 35, எலிசா பெர்ரி 1, பெத் மூனி 1, அனபல் சுதர்லேன்ட் 6, ஆஷ்லிக் கார்டனர் 8 ரன்கள் எடுத்தனர். இறுதியில் ஆட்டமிழக்காமல் ஜார்ஜியா வோல் 46, கேப்டன் தகிலா மெக்ராத் 4 ரன்களில் இருக்க அந்த அணி 16.2 ஓவர்களில் 102 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியத் தரப்பில் அதிகபட்சமாக ரேணுகா தாக்கூர் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 2வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் டிச. 8ம் தேதி நடைபெறவுள்ளது.












