Email :15
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு, மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமைமையில் அதிமுகவினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அவரிடம் செய்தியாளர்கள், ‘‘உலகத்திலேயே பிரிந்தவர்கள் ஒன்றிணையக் கூடாது என்று நினைப்பவர் இபிஎஸ் மட்டும் தான் என்று ஓபிஎஸ் கூறியிருக்கிறாரே’’ என்றனர். அப்போது இடைமறித்த செல்லூர் ராஜூ, ‘‘ஓபிஎஸ்சா…? அப்படினா யாரு? நாங்கள் எல்லோரும் அவரை மறந்து விட்டோம்’’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.












